மிக்ஜாம்னு நல்லா பேரு வச்சிங்க புயலுக்கு.. இருக்கறத பூரா ஜாம் பண்ணிட்டு போய்டுச்சு!
சென்னை: வெள்ளம் வந்ததில் இருந்து சென்னை என்றாலே மற்ற ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, இதற்கு முன் சென்னையில் இருந்தவர்களுமே அலறுகிறார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தின் தலைநகர் சென்னைதான் முன்பெல்லாம் பலரது கனவு நகரங்களில் ஒன்றாக இருந்தது. படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் சென்னைக்குப் போனால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என ஊரில் இருந்து கிளம்பி வந்து, இங்கு வளர்ந்தவர்கள் ஏராளம்.
சென்னையின் பூர்வக்குடிகளைவிட இங்கு வந்து குடியேறி, சென்னையை சொந்த ஊராக்கிக் கொண்டவர்கள்தான் இப்போதும் இங்கு அதிகம். அதனால்தான் தீபாவளி, பொங்கல் என்றால் ஊரே காலியாகி விடுகிறது. அந்தளவிற்கு இங்கு வெளியூர்க்காரர்கள் அதிகம்.
ஆனால், சென்னையின் இந்தப் புகழை எல்லாம், சமீபத்தில் வந்த வெள்ளம் மாற்றி விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். விடுமுறைக்காக ஊருக்குச் சென்றவர்கள்கூட திரும்பவும் சென்னைக்கு வரலாமா என யோசிப்பதாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
போதாக்குறைக்கு சைடுகேப்பில், இதுதான் நல்ல வாய்ப்பு என, 'இனி சென்னைக்காரர்களுக்கு பெண் தராதீர்கள்.. எங்களுக்கு தாருங்கள்' என மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்ட இளைஞர்கள் மீம்ஸ் போட்டு தங்களுக்கு நவீன முறையில் பெண் கேட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications