என்ன ஜென்மம் இது.. எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் எப்பப்பாரு போனை நோண்டிக்கிட்டே இருக்கு!
சென்னை : ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்கு மேல் ஆகி விட்டாலே, நம் நெட்டிசன்கள் ஒண்ணாம் தேதியைத் தேடி மீம்ஸ் போட ஆரம்பித்து விடுவார்கள்.
பணம்தான் இங்கு பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல.. மரியாதையையும் தீர்மானிக்கிறது. அதனால்தான் பணத்தைத் தேடி மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தில் தங்களது மதிப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கையை மீறிச் செலவு செய்து விடுகின்றனர்.
அதனால் ஒவ்வொரு மாதமும் எப்போது சம்பளம் வரும் என எதிர்பார்த்திருப்பதும், வந்த சம்பளம் உடனே காலியாகி விடுவதால், கையில் பணம் இல்லை என புலம்புவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த புலம்பல் எதிர்படுபவர்களிடம் மட்டும் இல்லாமல், மீம்ஸ்களாக சமூகவலைதளம் வரை நீண்டு விடுகிறது.
இப்படி ஒரு குரூப் புலம்பிக் கொண்டிருக்க, ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் போனையே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. "என்ன ஜென்மம் இது.. எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் எப்பப்பாரு போனை நோண்டிக்கிட்டே இருக்கு!" என சைடுகேப்பில் அவர்களையும் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications