ஒரு மண்டலம் லீவு விட்டுட்டு.. திடீர்னு ஸ்கூலுக்கு வர சொன்னா வருத்தமாதான்யா இருக்கும்!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறந்து இரண்டு நாட்கள்தான் ஆகியுள்ளது, அதற்குள் என்ன காரணம் கூறி பள்ளிக்கு விடுமுறை எடுக்கலாம் என மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வீட்டு வீடு வாசப்படி என்பது மாதிரி, ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புவது என்பது மிகப் பெரிய டாஸ்க் தான். அதுவும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வதென்றால், குழந்தைகளுக்கே பழகுவதற்கு எப்படியும் ஒரு வாரம் ஆகும். முதல்நாளான நேற்றுகூட மீண்டும் நண்பர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் கிளம்பியிருப்பார்கள்.
ஆனால், முதல்நாளே பல பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்க ஆரம்பித்து விட்டதால், இரண்டாம் நாளான இன்றே எப்படியெல்லாம் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாம் என மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக இன்றும் பள்ளிகள் திறப்பு பற்றி சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications