பிறர் அன்புக்கு ஏங்குவதைவிட.. பிரியாணி சாப்டுட்டு தூங்குறது மேல்.. எப்படிபட்ட வரிகள்!
சென்னை : விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து, வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமையை சமூகவலைதளப் பக்கத்தில் மணமணக்க கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே விதவிதமாக சாப்பிட்டாக வேண்டும் நம் மக்களுக்கு. அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, விதவிதமாக சாப்பிட்டால்தான், அது முழுமையான ஞாயிறாக இருக்கும். அதனால்தான் மற்ற நாட்களைவிட, ஞாயிற்றுக்கிழமைகளில் யாரைப் பார்த்தாலும், 'இன்னைக்கு வீட்ல என்ன ஸ்பெஷல் சாப்பாடு' என்ற கேள்வியை மறக்காமல் கேட்கின்றனர்.

விதவிதமாக சாப்பிட்டு வயிற்றுக்கு விருந்து கொடுத்தால் மட்டும் போதுமா?, கண்களுக்கும் விருந்து தர வேண்டும் அல்லவா.. அதனால்தான், ஒவ்வொரு வாரமும் ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளப் பக்கங்களிலும் சைவம், அசைவம் என விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து கமகமக்க வைத்து விடுகின்றனர்.
இந்த வாரமும் அப்படித்தான், "பிறர் அன்புக்கு ஏங்குவதை விட.. பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்குவது மேல்.. ஆஹா, எப்படிப்பட்ட வரிகள்!" என்பதில் ஆரம்பித்து, "கறி இருக்கும் வரைதான் அதற்குப் பெயர் பிரியாணி.. கறி தீர்ந்து விட்டால் அதற்குப் பெயர் குஸ்கா" என தத்துவங்களையும் சாப்பாட்டில் கலந்து கட்டி மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications