ஒரு நிமிடம்.. இதயமே நின்னுடுச்சு.. தமிழ்நாடு அரசு அனுப்பிய எமர்ஜென்சி அலர்ட்.. ட்ரெண்டான மீம்ஸ்!
சென்னை; இன்று தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி மெசேஜ் அனுப்பப்பட்டது . இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழ்நாடு அரசு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, மேம்படுத்தவும், பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் எதிர்வரும் இன்று நடத்தப்பட உள்ளது.

"செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" தொழில்நுட்பமாகும். இதில் ஒரு முறை என்பது ஒரு அதிநவீன செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. அதை இன்று சோதனை செய்தனர்.
( உங்க போனுக்கு தமிழ்நாடு அரசு அனுப்ப போகும் மெசேஜ்.. கவனமாக பார்த்துக்கோங்க.. ரொம்ப முக்கியம்)
மீம்ஸ்: இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நாங்கள் நிம்மதியாக தூங்க போகும் நேரத்தில் திடீரென இந்த மெசேஜ் வந்தது. சட்டென பதற்றம் ஆகிவிட்டது என்று நெட்டிசன் ஒருவர் மீம் போட்டுள்ளார்.

இன்னொருவர்.. இதை கேட்டதும் ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்., அதேபோல் இன்னொருவர் எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு போயிடுச்சு.. அந்த அளவிற்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் மத்திய அரசு இதை சோதனை செய்தது. இந்த நிலையில் மாநில அரசு மீண்டும் சோதனை செய்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள ஒருவர்.. அடிக்கடி இப்படி சோதனை செய்வது சரியில்லை. ஒருமுறை, இரண்டு முறை என்றால் ஓகே. அடிக்கடி இப்படி ஏன் சோதனை செய்கிறீர்கள்? என்று மீம் போட்டு கேட்டுள்ளார். ஒருமுறை அனுப்புவதே அதிகம்.. இதில் இவர்கள் தமிழில் ஒருமுறை.. ஆங்கிலத்தில் ஒருமுறைக்கு அனுப்பி சோதனை செய்கிறார்கள்;.

சோதனை: இந்த சோதனை அடிப்படையில் இன்று எல்லோருக்கும் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மெசேஜ் அனுப்பப்பட்டது.
கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" அமைப்பின் சோதனையினை 20.10.2023 இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்தப்பட்டு உள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications