ஒரு நிமிடம்.. இதயமே நின்னுடுச்சு.. தமிழ்நாடு அரசு அனுப்பிய எமர்ஜென்சி அலர்ட்.. ட்ரெண்டான மீம்ஸ்!
சென்னை; இன்று தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி மெசேஜ் அனுப்பப்பட்டது . இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை தமிழ்நாடு அரசு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, மேம்படுத்தவும், பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் எதிர்வரும் இன்று நடத்தப்பட உள்ளது.

"செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" தொழில்நுட்பமாகும். இதில் ஒரு முறை என்பது ஒரு அதிநவீன செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. அதை இன்று சோதனை செய்தனர்.
( உங்க போனுக்கு தமிழ்நாடு அரசு அனுப்ப போகும் மெசேஜ்.. கவனமாக பார்த்துக்கோங்க.. ரொம்ப முக்கியம்)
மீம்ஸ்: இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நாங்கள் நிம்மதியாக தூங்க போகும் நேரத்தில் திடீரென இந்த மெசேஜ் வந்தது. சட்டென பதற்றம் ஆகிவிட்டது என்று நெட்டிசன் ஒருவர் மீம் போட்டுள்ளார்.

இன்னொருவர்.. இதை கேட்டதும் ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்., அதேபோல் இன்னொருவர் எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு போயிடுச்சு.. அந்த அளவிற்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் மத்திய அரசு இதை சோதனை செய்தது. இந்த நிலையில் மாநில அரசு மீண்டும் சோதனை செய்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள ஒருவர்.. அடிக்கடி இப்படி சோதனை செய்வது சரியில்லை. ஒருமுறை, இரண்டு முறை என்றால் ஓகே. அடிக்கடி இப்படி ஏன் சோதனை செய்கிறீர்கள்? என்று மீம் போட்டு கேட்டுள்ளார். ஒருமுறை அனுப்புவதே அதிகம்.. இதில் இவர்கள் தமிழில் ஒருமுறை.. ஆங்கிலத்தில் ஒருமுறைக்கு அனுப்பி சோதனை செய்கிறார்கள்;.

சோதனை: இந்த சோதனை அடிப்படையில் இன்று எல்லோருக்கும் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மெசேஜ் அனுப்பப்பட்டது.
கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" அமைப்பின் சோதனையினை 20.10.2023 இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்தப்பட்டு உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications