என்னங்க இப்படி இறங்கிடீங்க! சென்னை மக்களே உங்க மகள்கள் வெள்ளத்தில் கஷ்டப்படக் கூடாதா? தெறி மீம்ஸ்!
திருச்சி: மிக் ஜாம் புயல் வந்ததும் வந்தது, ஒரேயடியாக சமூக வலைதளங்களில் அதை மையப்படுத்தியும், அது ஏற்படுத்திய தாக்கத்தை குறும்புடன் குறிப்பிட்டும் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்படுகின்றன.
சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. யாரும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இருளில் உணவின்றி, பாலின்றி பெரியோர் முதல் கைக்குழந்தைகள் வரை தவித்துப் போய்விட்டனர். சென்னை மக்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் ஜாலி ஜமாலியன் என்ற பெயரில் நடத்தி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீம்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், ''சென்னை மக்களே உங்க வீட்டு பெண்கள், இனிமேல் இது போல் மழை வெள்ளத்தால் கஷ்டப்படாமல் இருக்க திருச்சி மாவட்ட மாப்பிள்ளைகளுக்கு பெண் தாருங்கள். இங்கு லேசான மழை தான் பெய்யும். இப்படிக்கு திருச்சி மாவட்ட இளைஞர் சங்கம்.'' என்ற வரிகள் அந்த மீம்ஸில் இடம்பெற்றுள்ளன.
ஒரு காலத்தில் மாப்பிள்ளை சென்னையில் வேலை பார்க்கிறாராம் என விரும்பி பெண் கொடுத்த காலம் மலையேறிப் போய், இப்போது வெள்ளம் வராத ஊருக்கு பெண் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதை இவ்வாறு சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் அந்த மீம்ஸில் ஜாலி ஜமாலியன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மிக் ஜாம் புயலை மையமாக வைத்து இன்னும் பல கண்டண்ட்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து சென்னையில் கிரவுண்ட் ஃபுளோர் வீடுகளின் வாடகை கணிசமாக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications