ஜல்லிக்கட்டுக்கு போராடிய அதே மெரினாவில் மழையும் போராடுகிறது.. ஏரி, ஆறுகளை திரும்பக் கேட்டு!
சென்னையில் கடந்த 6 நாள்களாக மழை வெளுத்து வாங்கியது. இன்றைய தினம் மழை சற்றே ஓய்ந்தாலும் நெட்டிசன்கள் ஓய்ந்த பாடில்லை.
சென்னை: மழையால் சின்னாபின்னமாகி வரும் சென்னை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சென்னையில் கடந்த 6 நாள்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள் சேதமடைந்து, தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் பல பகுதிகளில் சூரிய பகவான் தலை காட்ட தொடங்கிவிட்டார். எனினும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விடாமல் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.
|
ஏரியே வெல்லும்
ஏரியின் வாழ்வினை ரியஸ் எஸ்டேட் கவ்வும். இறுதியில் ஏரியே வெல்லும்.
|
மழை நீரின் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு
போராடின அதே மெரினா
இடத்தில் மழைநீர் போராடுகிறது
என் ஏரிகளையும் ஆறுகளையும்
திரும்பி தாருங்கள்
|
லாரி போக வேண்டிய இடத்தில்...
#தண்ணி போக வேண்டிய ஆறுல லாரி போது..
#லாரி போக வேண்டிய ரோடுல தண்ணி போது..
இனிமேலாது திருந்துங்க.
|
மழைக்கே பயம்
மழை பெய்வதை பார்த்து ஒரு ஊரே பயந்தா அது #சென்னை
அந்த மழையே ஒரு ஊரில் பெய்ய பயந்தா
அதான் #ராம்நாடு
ஹய்யோ....ஹய்யோ..
|
மொதல்ல இருந்து பெய்றேன்
#சென்னை: "யோய் 5 நாளாச்சுய்யா கிளம்புய்யா...!!"
#மழை : "நீ கணக்கு தப்பா சொல்ற..இரு நான் மொதல்ல இருந்து பெய்றேன்.












Click it and Unblock the Notifications