2021 புத்தாண்டு தீர்மானங்கள்.. தோட்டம் போடுங்க.. பூத்துக் குலுங்கட்டும்!
சென்னை: இதோ 2021 நெருங்கி விட்டது. நம்மையெல்லாம் நொறுக்கிப் போட்ட 2020ஐ விரட்டி விட்டு, 2021க்கு வரவேற்பு கொடுக்கத் தயாராவோம்.
இந்த புது வருடத்தில் நாம் ஒரு தீர்மானம் போடலாம்.. இப்போதெல்லாம் மாடித் தோட்டம் என்பது பேஷனாகி விட்டது.
நாம் அதை Passion ஆக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கலாம். மாடித் தோட்டம் மணக்கட்டும்.. காய்கறிகள், பழங்கள் பூத்துக் குலுங்கட்டும்.. இதனால் பல நன்மைகள் உண்டு.

மாடித் தோட்டம்
ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காய்கறிகள் பழங்கள் மிகவும் அவசியம். ரசாயனம் கலந்த காய்கறிகள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து சமைப்பதில் சுவை இருப்பதில்லை. இதுவே நம் வீட்டில் வளர்ந்த காய்கறி என்றால் அதன் மதிப்பே தனி தான்.

குட்டித் தோட்டமும் ஓகேதான்
காய்கறிகள் பழங்களை வளர்க்க நம் வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டம் தேவையில்லை. சென்னை பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டுமாடியில் தோட்டம் போடலாம். சிறு சிறு பைகளில் மண்ணை நிரப்பி விதையிட்டு சூரிய வெளிச்சத்தில் வளர்ந்து விடும்.

தக்காளி பழங்கள்
கீரைகள் பதினைந்து நாட்களிலும் தக்காளி போன்றவை வளர ஒரு மாதமும் ஆகும். அதன் சுவையில் நாம் மெய்மறந்து விடுவோம். நம் பிள்ளைகளுக்கும் நல்ல சுவையான காய்கறிகளைக் கொடுத்த நிறைவும் நமக்கு இருக்கும்.

காலை புத்துணர்ச்சி
மாடித்தோட்டம் போடுவதால் காலையில் நல்ல காற்றைச் சுவாசிக்க முடியும். பச்சைப் பசேலென செடிகளைப் பார்க்கும்போது மனம் புத்துணர்ச்சி அடைகிறது.நம் பிள்ளைகளுக்கும் இதைக் கற்றுக் கொடுங்கள். அவர்களும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது களை எடுப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது அவர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.

உற்சாகம் கூடும்
ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாய் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக நம் வீட்டிலேயே அது கிடைத்தால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை நீங்களும் அனுபவித்துப் பாருங்களேன். இந்தப் புத்தாண்டில் மாடித்தோட்டம் போடுங்கள். காய்களும் பழங்களும் காய்த்துக் குலுங்கட்டும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications