பாசிட்டிவா இருங்க.. நெகட்டிவ் எல்லாம் ஓடிப் போய்ரும்!
மனசு எப்படி இருக்கணும் தெரியுமா.. குடத்தில் பிடித்த நீர் அப்படியே ததும்பியபடி இருக்குமே.. அப்படி பளிச்சென இருக்க வேண்டும். பாசிட்டிவ் மனசுதான் எப்பவுமே எதிலுமே வெல்லும்.
மனசில் எப்பவுமே பாசிட்டிவான சிந்தனைகளை நிரப்பி வைங்க.. ரிசல்ட்டைப் பாருங்க உங்களுக்கே உற்சாகம் தரும் வகையில் முடிவுகள் இருக்கும். நெகட்டிவிட்டி சுத்தமாக ஓடிப் போயிருக்கும். பாசிட்டிவ் சிந்தனைகள் நிறைந்த ஒருவர்தான் வாழ்க்கையில் நெகட்டிவிட்டியை ஓட ஓட விரட்டி வெல்ல முடியும்.
எந்தவொரு செயலையும் தொடங்கும்போது என்னால் இச்செயலைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையோடு செய்யுங்கள். எப்பொழுதும் மனதில் என்னால் முடியும் நிச்சயம் நான் திறம்பட செய்து முடிப்பேன் என்று உங்களுக்குள்ளேயே கூறுங்கள்.
சிரித்த முகத்துடனும் மனதில் தன்னம்பிக்கையுடனும் நாம் செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றிப் பெறும். பாசிடிவ் எனர்ஜி உள்ளவர்கள் அவர்கள் இருக்குமிடத்தில் அனைவருக்கும் அந்த பாசிட்டிவ் எனர்ஜி அவர்களிடமும் இருக்கும். எப்பொழுதும் ஒரு செயலைச் செய்யும் போது நேர்மறையான எண்ணங்கள் அவசியமாகிறது. அந்த எண்ணங்கள் நம்மை ஊக்குவித்து நம் செயல்களைத் திறம்பட செய்து வெற்றிக்கான வழிவகுக்கிறது.
நீலகிரியில் பொத்துக் கொண்டு ஊற்றிய வானம்.. இந்திய அளவில் புதிய சாதனை.. அவலாஞ்சியில் 58 செ.மீ மழை
இலக்கில்லாதவர்கள் எவருமே இலர். நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது நாம் எப்பொழுதும் பாசிட்டிவ்வாக சிந்திக்க வேண்டும். இன்று கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறோம். நம் உறவுகளுடன் நேரம் செலவிட மறுபடியும் இது போன்ற இன்னொரு பொன்னான வாய்ப்புக் கிடைக்காதே என்றெண்ணி கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துங்கள்.
எப்பொழுதும் உங்களைச் சுற்றி நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் உங்களுடன் இருக்கட்டும். அப்பொழுதுதான் நீங்களும் ஆக்டிவ்வாக இருப்பீர்கள். நெகடிவ் எண்ணங்கள் ஒரு கட்டத்தில் நம்மையே அழித்துவிடும். எனவே டோன்ட் திங்க் நெகடிவ் பீ பாசிட்டிவ்.