ஓவர்... ஓவர்... ஊரெங்கும் நிசப்தம்.. நடுராத்திரி... காற்றில் பறந்து வந்து விழும் அந்த கவிதை வரிகள்!
வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் கணேசன் கவிதை சொல்கிறார்.
Recommended Video

சென்னை: ஓவர்... ஓவர்... இப்படிதான் நமக்கு கேட்டு பழக்கம். ஆனால் ஊரெங்கும் நிசப்தம்.. நடுராத்திரி... மெல்லியதாக வீசும் காற்றில் பறந்து வந்து வாக்கி டாக்கியில் விழுகிறது அந்த கவிதை வரிகள்!!
பொதுவாக இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள். அப்போது அவர்களது எல்லாருடைய கையிலும் வாக்கி டாக்கி கொடுத்திருப்பார்கள். இது எதற்கு என்றால், எங்கு பணி செய்கிறார்கள், அப்போதைக்கு என்ன முக்கிய சம்பவம், எங்கே நடக்கிறது, இதைப்பற்றியெல்லாம் அதில் பரிமாறப்படும்.
இப்படித்தான் கடந்த 24-ம் தேதி எல்லோரும் வாக்கி டாக்கியில் பிசியாக இருந்தார்கள். அன்றைய தினம் வடசென்னை துணை ஆணையர் ஜெயலட்சுமி வாக்கி டாக்கி ஆய்வினில் ஈடுபட்டிருந்தார்.

எதிர்பார்க்கவில்லை
அந்த நேரத்தில்தான் கவிதை வரிகள் அதில் பாடப்பட்டது. பரபரப்பும், தீவிரமானதுமான சம்பவங்கள் மட்டுமே தெரிவித்து வரும் அந்த வாக்கி டாக்கியில் திடீரென ஒரு கவிதை மழையை அந்த ராத்திரி நேரத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை.

யார் இவர்?
கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.. எல்லாமே கம்பீர வார்த்தைகள் நிறைந்த கவிதைகள். உத்வேகம் தரக்கூடிய வரிகள்! வாக்கி டாக்கியில் இவ்வளவு தைரியமாக, கவிதையை சொன்னது யார் என விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்த கவிதையை வாசித்தது சென்னை உயர்நீதிமன்ற வளாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் கணேசன் என்பது. உடனடியாக அவரை கூப்பிட்டு ஒரு பெரிய பாராட்டை தெரிவித்தார் துணை ஆணையர் ஜெயலட்சுமி.

20 வருடங்கள்
இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு வயது 49 ஆகிறது. 20 வருடங்களாகவே இவர் இப்படித்தான் வாக்கி டாக்கியில் கவிதை சொல்லி வருகிறாராம். எல்லாமே நைட் டியூட்டி நேரத்தில்தான் கவிதை சொல்லுவாராம். தமிழ் மீது நிறைய காதலாம். பல நூல்களையும் எழுதி இருக்கிறாராம். இவரது கவிதை மொழி, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மன அழுத்தம்
இதை பற்றி இன்ஸ்பெக்டர் கணேசன் சொல்லும்போது, "நைட் நேரத்தில் போலீசார் பணிசுமை காரணமாக சோர்வாகி விடுகிறார்கள். கூடவே அவர்களுக்கு பணி அழுத்தமும் இருக்கிறது. நைட் டியூட்டி நேரத்தில் களைப்பில் தூங்கியும் விடுகிறார்கள்.

குவிகிறது பாராட்டு
அதனால சூழலுக்கு ஏற்ப கவிதை எழுதி அதை வாக்கி டாக்கி மூலம் சொல்வேன். எனக்கு எப்போவெல்லாம் நைட் டியூட்டியோ, அப்போதெல்லாம் என் குழுவினரை மைக் மூலமாக கவிதை சொல்லி தூங்காமல் விழிப்புடன் வைத்திருப்பேன். இதனால் என்னை நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள்" என்றார்
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications