ஓவர்... ஓவர்... ஊரெங்கும் நிசப்தம்.. நடுராத்திரி... காற்றில் பறந்து வந்து விழும் அந்த கவிதை வரிகள்!
வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் கணேசன் கவிதை சொல்கிறார்.
Recommended Video

சென்னை: ஓவர்... ஓவர்... இப்படிதான் நமக்கு கேட்டு பழக்கம். ஆனால் ஊரெங்கும் நிசப்தம்.. நடுராத்திரி... மெல்லியதாக வீசும் காற்றில் பறந்து வந்து வாக்கி டாக்கியில் விழுகிறது அந்த கவிதை வரிகள்!!
பொதுவாக இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள். அப்போது அவர்களது எல்லாருடைய கையிலும் வாக்கி டாக்கி கொடுத்திருப்பார்கள். இது எதற்கு என்றால், எங்கு பணி செய்கிறார்கள், அப்போதைக்கு என்ன முக்கிய சம்பவம், எங்கே நடக்கிறது, இதைப்பற்றியெல்லாம் அதில் பரிமாறப்படும்.
இப்படித்தான் கடந்த 24-ம் தேதி எல்லோரும் வாக்கி டாக்கியில் பிசியாக இருந்தார்கள். அன்றைய தினம் வடசென்னை துணை ஆணையர் ஜெயலட்சுமி வாக்கி டாக்கி ஆய்வினில் ஈடுபட்டிருந்தார்.

எதிர்பார்க்கவில்லை
அந்த நேரத்தில்தான் கவிதை வரிகள் அதில் பாடப்பட்டது. பரபரப்பும், தீவிரமானதுமான சம்பவங்கள் மட்டுமே தெரிவித்து வரும் அந்த வாக்கி டாக்கியில் திடீரென ஒரு கவிதை மழையை அந்த ராத்திரி நேரத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை.

யார் இவர்?
கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.. எல்லாமே கம்பீர வார்த்தைகள் நிறைந்த கவிதைகள். உத்வேகம் தரக்கூடிய வரிகள்! வாக்கி டாக்கியில் இவ்வளவு தைரியமாக, கவிதையை சொன்னது யார் என விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்த கவிதையை வாசித்தது சென்னை உயர்நீதிமன்ற வளாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் கணேசன் என்பது. உடனடியாக அவரை கூப்பிட்டு ஒரு பெரிய பாராட்டை தெரிவித்தார் துணை ஆணையர் ஜெயலட்சுமி.

20 வருடங்கள்
இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு வயது 49 ஆகிறது. 20 வருடங்களாகவே இவர் இப்படித்தான் வாக்கி டாக்கியில் கவிதை சொல்லி வருகிறாராம். எல்லாமே நைட் டியூட்டி நேரத்தில்தான் கவிதை சொல்லுவாராம். தமிழ் மீது நிறைய காதலாம். பல நூல்களையும் எழுதி இருக்கிறாராம். இவரது கவிதை மொழி, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மன அழுத்தம்
இதை பற்றி இன்ஸ்பெக்டர் கணேசன் சொல்லும்போது, "நைட் நேரத்தில் போலீசார் பணிசுமை காரணமாக சோர்வாகி விடுகிறார்கள். கூடவே அவர்களுக்கு பணி அழுத்தமும் இருக்கிறது. நைட் டியூட்டி நேரத்தில் களைப்பில் தூங்கியும் விடுகிறார்கள்.

குவிகிறது பாராட்டு
அதனால சூழலுக்கு ஏற்ப கவிதை எழுதி அதை வாக்கி டாக்கி மூலம் சொல்வேன். எனக்கு எப்போவெல்லாம் நைட் டியூட்டியோ, அப்போதெல்லாம் என் குழுவினரை மைக் மூலமாக கவிதை சொல்லி தூங்காமல் விழிப்புடன் வைத்திருப்பேன். இதனால் என்னை நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள்" என்றார்
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications