"7 மாத கர்ப்பம்.. அப்புறம் ஏன் டியூட்டி பார்க்கறீங்க" போலீஸ் அதிகாரி அம்ரிதாவின் அசர வைக்கும் பதில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராய்ப்பூர் போலீசுக்கு பாராட்டு குவிகிறது
ராய்ப்பூர்: 7 மாத கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா லாக்டவுன் காலத்தில் ரோட்டில் நின்று பணியாற்றி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. நம் நாட்டிலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக போலீசாரும் விழிப்புடன் இருந்து மக்களை காத்து வருகின்றனர்.

சேவை
சாலைகளில் எந்தவித அசம்பாவித செயல்களும் நடந்துவிடாமல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. எப்படி மருத்துவ துறை குடும்பத்தினரை மறந்து பொதுசேவையில் உள்ளனரோ, அதுபோல காவல் துறையினரும் முனைப்புடன் முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர். அப்படி ஒரு பெண் போலீஸ் அதிகாரிதான் மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார்.

ராய்ப்பூர்
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் துணை நிலை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் பெயர் அம்ரிதா சோரி.. 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.. வயிறு பெரிதாக காணப்படுகிறது.. இதுபோன்ற நேரங்களில் ஓய்வு என்பது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தேவையான ஒன்று.. இந்நிலையிலும் சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

ஊக்கம்
"இந்த போலீஸ் பணி என்பது மிகவும் முக்கியமானது... நான் சாலையில் நிற்கும்போது என்னுடன் இருக்கும் மற்ற போலீஸார்களுக்கும் அது மேலும் ஊக்கத்தினை தருகிறது.. என்னுடன் வேலை பார்க்கும், மூத்த, இளைய காவல்துறை பணியாளர்கள் எனக்கு இந்த நேரத்தில் மிகுந்த ஆதரவாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். அம்ருதாவின் இந்த பதில் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

கமெண்ட்கள்
"இந்த நெருக்கடி நேரத்தில் இதுபோன்று அதிகாரிகளை பார்த்தாவது மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், நெட்டிசன்கள் அம்ருதாவுக்கு அட்வைஸ் தந்துள்ளனர்.. "உங்க உடல்நிலையையும் பார்த்து கொள்ளுங்கள் மேடம்" என்று பாசமிகு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications