"7 மாத கர்ப்பம்.. அப்புறம் ஏன் டியூட்டி பார்க்கறீங்க" போலீஸ் அதிகாரி அம்ரிதாவின் அசர வைக்கும் பதில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராய்ப்பூர் போலீசுக்கு பாராட்டு குவிகிறது
ராய்ப்பூர்: 7 மாத கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா லாக்டவுன் காலத்தில் ரோட்டில் நின்று பணியாற்றி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. நம் நாட்டிலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக போலீசாரும் விழிப்புடன் இருந்து மக்களை காத்து வருகின்றனர்.

சேவை
சாலைகளில் எந்தவித அசம்பாவித செயல்களும் நடந்துவிடாமல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. எப்படி மருத்துவ துறை குடும்பத்தினரை மறந்து பொதுசேவையில் உள்ளனரோ, அதுபோல காவல் துறையினரும் முனைப்புடன் முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர். அப்படி ஒரு பெண் போலீஸ் அதிகாரிதான் மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார்.

ராய்ப்பூர்
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் துணை நிலை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் பெயர் அம்ரிதா சோரி.. 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.. வயிறு பெரிதாக காணப்படுகிறது.. இதுபோன்ற நேரங்களில் ஓய்வு என்பது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தேவையான ஒன்று.. இந்நிலையிலும் சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

ஊக்கம்
"இந்த போலீஸ் பணி என்பது மிகவும் முக்கியமானது... நான் சாலையில் நிற்கும்போது என்னுடன் இருக்கும் மற்ற போலீஸார்களுக்கும் அது மேலும் ஊக்கத்தினை தருகிறது.. என்னுடன் வேலை பார்க்கும், மூத்த, இளைய காவல்துறை பணியாளர்கள் எனக்கு இந்த நேரத்தில் மிகுந்த ஆதரவாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். அம்ருதாவின் இந்த பதில் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

கமெண்ட்கள்
"இந்த நெருக்கடி நேரத்தில் இதுபோன்று அதிகாரிகளை பார்த்தாவது மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், நெட்டிசன்கள் அம்ருதாவுக்கு அட்வைஸ் தந்துள்ளனர்.. "உங்க உடல்நிலையையும் பார்த்து கொள்ளுங்கள் மேடம்" என்று பாசமிகு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications