உங்களை செதுக்கும் சிற்பி யார் தெரியுமா?
உங்களைச் செதுக்கும் சிற்பி யார் தெரியுமா.. சாட்சாத் நீங்களேதாங்க.. உங்களை செதுக்கி செம்மையாக்க உங்களை விட சிறந்த சிற்பி வேறு யாரேனும் இருக்க முடியுமா சொல்லுங்க. நிச்சயமா இருக்க முடியாது. ஒவ்வொரு செயலும் நீங்கள் செய்யும் போது அதில் உங்கள் தனித்துவம் தெரிகிறது.
உங்களை அழகிய சிலையாக மாற்றுவதும் கல்லாகவே வைத்திருப்பதும் உங்களால் தான் முடியும். மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. நீங்கள் நினைத்தால் உங்களை சிறந்த நபராக மாற்றிக் கொள்ள முடியும். உங்களுடைய வாழ்வின் லட்சியத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். பிடித்த படிப்பை பிடித்த வேலையைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் இலக்கினை அடையக் கூடிய பாதைகளை வழிமுறைகளை வகுத்திடுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில். தீவிர முயற்சியால் வாழ்வின் இலக்கை அடையுங்கள். மற்றவரைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருக்கும் இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறலாம். இருக்கும் ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதும் கவலையோடு வாழ்வதும் நம் கையில் தான் இருக்கிறது.
ஒரு குடிசையில் விவசாயி தன் மனைவி ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தான். தன் நிலத்தில் சோளம் நிலக்கடலை போன்றவற்றைப் பயிரிட்டான். அதில் வந்த லாபத்தில் தன் மனைவியின் மூலம் சிறிய தொழில் ஆரம்பித்தான். வீட்டிலேயே மசால் வகைகள் ஊறுகாய் வகைகள் வடகங்கள் நிலக்கடலை மிட்டாய் பலகாரங்கள் போன்றவற்றைச் செய்து விற்பனை செய்வார்கள். அவன் மகன் படித்துப் பட்டம் பெற்றான். எங்கும் வேலை கிடைக்கவில்லை.
பின் ஒருநாள் தந்தை அவனிடம் உன்னிடம் உலகை மாற்றுவதற்கான சக்தி இருக்கிறது. நீ நினைத்தால் எதுவும் சாதிக்கலாம் வா என்னுடன் என்று வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சாரை சாரையாக செல்லும எறும்புகளைக் காட்டி எத்தனை துன்பம் வந்தாலும் தன் இரையை நோக்கிப் பயணம் செய்கிறது எறும்புகள் அதுபோல நாமும் நம்மை செதுக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
வீட்டிற்கு வந்த மகன் தன் தாய் தந்தையரின் தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தான். காலையில் வயல் வேலை பிறகு மசாலா தொழில் என்று பரபரப்பாக வேலை செய்தான். ஆறே மாதத்தில் தன் தந்தையின் பெயரில் ஃபுட் பேக்டரி திறந்துவிட்டான். ஒரு பக்கம் நிலத்தில் காலத்திற்கேற்ப பயிரிடுதல் வீட்டைச் சுற்றிக் காய்கறித் தோட்டம் அதைத் தவிர மசாலா மற்றும் ஊறுகாய் வகைகள் தயாரிப்பதில் புதுமையைப் புகுத்தி வெளிநாடுகளுக்கும ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தான்.
நீங்கள் என்னவாக வேண்டுமென்று முடிவு செய்பவர்கள் நீங்கள் தான். உங்கள் குறிக்கோளை அடைய முயற்சி செய்யுங்கள். நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications