சும்மா பேசிட்டே இருக்காதீங்க.. செய்து காட்டுங்க!
நிறையப் பேர் நிறைய பேசுவார்கள்.. பேசிக் கொண்டே இருப்பார்கள். காரியம் மட்டும் நடக்காது. வாய்ச் சொல் வீரர்களாக இருப்பார்கள்.. ஆனால் அப்படி இருப்பதால் ஒரு பயனும் கிடையாது. மாறாக சொல்லக் கூடாது.. செய்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான திறமை.
என்கிட்ட இந்த வேலையைக் கொடுத்திருந்தால் நான் இதை இன்னும் சிறப்பாக செய்வேன் என்று கூறும் சிலரிடம் அந்த வேலையைக் கொடுத்தால் அவர்களுக்கு உண்மையில் அதை சரிவர செய்ய தெரியாது.

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ரமேஷ் தினேஷ் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் நன்றாகப் படித்தனர். படித்து முடித்து விட்டு இருவரும் தந்தையின் வயலில் வேலை செய்தனர்.
அவ்வாறு வேலை செய்யும் போது இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அதனால் ரமேஷ் தன் தந்தையிடம் மொத்த நிலத்தையும் தன் பேருக்கு எழுதித் தருமாறு கேட்டான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சிறிது நேர யோசனைக்குப் பின் தன் முடிவைத் தெரிவித்தார்.
இருவருக்கும் தன் நிலத்தை சமபங்காகப் பிரித்து கொடுத்தார். இருவரும் ஆறு மாதம் விவசாயம் செய்ய வேண்டும். யார் அதிகம் அறுவடை செய்கிறார்களோ அவருக்கே முழு நிலமும் சொந்தம் என்றார். அவருடைய கோரிக்கையை இருவரும் ஏற்றனர். ரமேஷ் தான் தினேஷை விட அதிக மகசூல் செய்வேன் பாருங்கள் என்று கூறிச் சென்றான்.
ரமேஷ் தனக்கு கொடுத்த நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டு ஜாலியாக பொழுதைக் கழித்தான். ஆனால் தினேஷோ காலத்திற்கேற்றவாறு பயிர்களை விதைத்துப் பயிர் செய்திருந்தான். நான் நிச்சயமாக தினேஷை விட அதிக விளைச்சல் காட்டுவேன் என்று அடிக்கடி தன் தந்தையிடம் கூறினான்.ஆறு மாதங்கள் கடந்தன.விவசாயி வந்து இருவருடைய விளைச்சலையும் பார்வையிட்டார். ரமேஷின் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தனர். அதற்கு சரிவர தண்ணீர் பாய்ச்சாத காரணத்தால் பயிர்கள் வாடி இருந்தன.
தினேஷ் தனக்குக் கொடுத்த இடத்தில் காய்கறிகள் பயிரிட்டு இருந்தான். அவனுடைய உழைப்பின் விளைவாக அதிக விளைச்சல் கிடைத்தது. இதைக் கண்ட விவசாயி தன் இரண்டாவது மகன் தினேஷிற்கு தன் நிலத்தை எழுதி கொடுத்தார். அவன் உழைப்பையும் பாராட்டினார். ரமேஷ் தினேஷிற்கு உதவியாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
வெறும் வாய்ச்சொல் வீரராக இருந்தால் மட்டும் போதாது செயலிலும் நம் திறமையை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றியை அடைய முடியும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications