ஆரம்பிக்கிறப்போ இருக்கும் தில்.. முடியும் வரை இருக்க வேண்டும்!
ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும்போது இருக்கும் மன உறுதி.. அதை முடிக்கும்போதும் இருக்க வேண்டும்.. அல்லது அது முடியும் வரை இருக்க வேண்டும்.
எந்த ஒரு செயலைச் செய்தாலும் வெற்றி அடையும்வரை மனஉறுதியுடன் போராட வேண்டும். மன உறுதி ஒன்று தான் உங்களுடைய மாபெரும் சக்தி. நீங்கள் உறுதியுடன் உங்கள் வேலைகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். சிலர் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது மன உறுதியோடு ஆரம்பிப்பர். நாளாக நாளாக அதன் மீதான நம்பிக்கைக் குறைந்து விடுகிறது. அவ்வாறு இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை உத்வேகத்தோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் வசமே.

வெற்றி எளிதில் கிடைப்பதில்லை. எவனொருவன் மன உறுதியோடு தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறானோ அவனே வெற்றி அடைகிறான். நாம் செல்லும் பாதையில் இருக்கும் தடைக்கற்களைக் கண்டு துவளாமல் அதையெல்லாம் மனஉறுதியோடு தகர்த்தெறிந்து விட்டு வெற்றியை நோக்கி வீறுநடை போடுங்கள். மனஉறுதியே மனிதனை மேன்மேலும் உயர்த்தும்.
சாதனைகள் படைக்க வேண்டும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய மனஉறுதியோடு போராடுங்கள். தோல்விகள் அடைந்தாலும் துவளாது குறைகளைக் களைந்து வெற்றியை அடையும் வழியைத் தேடுங்கள். என்னால் முடியும் நான் வெற்றி பெற்றே தீருவேன் என்ற உறுதியோடு உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள். தோற்பது தவறில்லை ஆனால் தோற்றுக் கொண்டே இருப்பது தான் தவறு.
உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்குவதற்கு நீங்கள் உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற வேண்டும்.திட்டமிட்டு மன உறுதியோடு உங்கள் குறிக்கோளை நோக்கிப் பயணியுங்கள். வெற்றி நிச்சயம். மனதில் உறுதி வேண்டும் வாழ்வை மென்மேலும் உயர்த்திட உறுதி வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications