For Daily Alerts
Just In
சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பொறுப்பேற்பு
சென்னை: நான்கு மாவட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன்மை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நான்கு புதிய நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி முகமது இப்ராஹிம், முருகேசன், ரவிராஜபாண்டியன், பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் புதிய நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள். புதிய நீதிபதிகளையும் சேர்த்து இந்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 6, 2009, 14:17 [IST]