வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இ.கம்யூனிஸ்ட்டுடன் ஐக்கிய கம்யூனிஸ்ட் இணைந்தது
சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்தன. இந்த அறிவிப்பை சென்னையில் புதன்கிழமை இவ்விரு கட்சிகளின் தலைவர்கள் ஆர்.நில்லகண்ணு, தா.பாண்டியன் கூட்டாக அறிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிந்து சென்றவர்களால் துவக்கப்பட்டதுதான் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி. இக்கட்சியின் அகில இந்திய தலைவராக ன்னாள் எம்.பி.தா.பாண்டியன் இருந்து வந்தார். தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் இக்கட்சி இடம் பெற்றிருந்தது. இப்போதுள்ள அரசியல் சூழ்நலையில் இக்கட்சி தனித்து இயங்குவதா அல்லது மதவாத சக்திகளை எதிர்ப்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதா என்ற கேள்வி இக்கட்டில் இருந்து வந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக இக்கட்சியின் தேசியக் குழு டில்லியில் கூடியது. அதில் இப்போதுள்ள சூழ்நலையில் மதவாத சக்திகளை எதிர்க்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவதே நில்லது என்ற டிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இவ்விரு கட்சிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நிடந்து வந்தது. தேசிய அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை சென்னையில் நிடந்த சந்திப்புக்கூட்டத்திற்குப் பின் இறுதிசெய்யப்பட்டது. இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் இதுகுறித்து விவாதித்தனர்.
இப்பேச்சுவார்த்தையின் டிவுகள் குறித்து சென்னையில் புதன்கிழமை இருகட்சித்தலைவர்களும் செய்தியாளர்களிடம் விவாதித்தனர். மத்தியில் உள்ள மதவாத சக்தியை எதிர்ப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று தீர்மானித்துள்ளோம். இந்த இணைப்பு லம் தமிழகத்தில் புதிய எழுச்சி ஏற்படும். இப்போதே இரு கட்சிகளும் இணைந்துவிட்டது என்றாலும் றையான இணைப்பு விழா அடுத்த மாதம் 8 ம் தேதி நிடைபெறும். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஏ.பி.பரதன் பங்கேற்கிறார் என்றனர்.