வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெல்லி சிறுமி சிங்கப்பூர் பொழுதுபோக்குப் பூங்காவில் சாவு
டெல்லி:
டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற எட்டு வயது பள்ளிச் சிறுமி, அங்குள்ள பொழுதுபோக்குப் பூங்காவின் நீர் சுழற்றும் இயந்திரத்திற்குள் சிக்கி இறந்தார்.
டெல்லி மாடர் தேய் பள்ளியில் ன்றாவது படித்து வந்தவர் சாச்சி சாஹ்னி (8). இவர் தனது தாயார் மற்றும் சிகாகோவில் வசிக்கும் தனது உறவினர் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
சென்டுசா தீவிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவின் நீர் விளையாட்டுப் பகுதியில் சாச்சி, அவரது 10 வயது சகோத சுக்னா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீர் வரும் பாதையில் சாச்சி சிக்கிக் கொண்டார். இதில் நீரைச் சுழற்றும் இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டு சாச்சி இறந்தார். சுக்னா அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
சம்பவம் நிடந்தபோது, நீல் குதித்துக் காப்பாற்றுவோர் அங்கு இல்லை. சாச்சி நீர் சுழற்றும் இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் குரல் எழுப்பவே, இயந்திரம் நறுத்தப்பட்டது.
புதன்கிழமை சாச்சியின் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications