வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வயதானால் அரசியல்வாதிகளின் திறமைகள் அதிகரிக்கும் - ஆய்வு அறிக்கை
திருவனந்தபுரம்:
வயது அதிகரிக்க அதிகரிக்க அரசியல்வாதிகளின் திறமையும் அதிகரிக்கும் என்று கேரளத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் மருந்துத் துறைத் தலைவரும் அரசியல்வாதிகளுக்கு மருத்துவம் பார்த்து வருபவருமான டாக்டர் டி. டாலுஸ் இந்த ஆய்வை மேற்கொண்டார். முதுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பயிலரங்கில் அவர் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
பல்வேறு துறைகளில் பணியாற்றும் வயதானவர்களின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்துள்ளார். அவர் மேற்கொண்ட ஆய்விலிருந்து மற்ற துறைகளில் பணியாற்றும் வயதானவர்களைக் காட்டிலும் அரசியலில் உள்ள வயதானவர்களின் திறமை அதிகமாக உள்ளது. அதுவும், வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களது திறமையும் அதிகரித்து வந்துள்ளது.
சிந்தனை, மன நலம், சுய கட்டுப்பாடு, பயமின்மை, செயல்திறமை போன்றவற்றில் வயதான அரசியல்வாதிகள் திறமை அதிகமாக உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் மற்றும் முதுபெரும் அரசியல்வாதிகளான கே.ஆர். கெளரி, பி.ஆர். குருப் ஆகியோரை டாலுஸ் கூறியுள்ளார்.
தங்களுக்குள்ள வயதான அனுபவத்தின் காரணமாக, மேற்கண்ட அரசியல்வாதிகள் அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் திறம்பட கையாண்டுள்ளதையும் தனது ஆய்வில் டாலுஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.