வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராப் அமைச்சரவையில் 80 அமைச்சர்கள்
பாட்னா:
பிகால் ராப் தேவி அரசில் புதிதாக 80 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 பேரும் அமைச்சர்களாகியுள்ளனர். இத்துடன் சேர்த்து அமைச்சரவையின் பலம் 82 ஆக உயர்ந்துள்ளது.
பாட்னாவிலுள்ள, ராஜ்பவனில் ஆளுநிர் வினோத் சந்திர பான்டே அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களில் 40 பேர் கேபினட் அந்தஸ்து கொண்டவர்கள். 41 பேர் இணை அமைச்சர்கள். ஏற்கனவே மார்ச் 12-ம் தேதி ராம்சந்திர பூர்வே, சட்டப் பேரவை விவகார அமைச்சராக பதவியேற்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபைக்கு 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் கேபினட் அமைச்சர்கள்.
ஆறு சுயேச்சை உறுப்பினர்களும் அமைச்சர்களாகியுள்னர்.
அமைச்சரவை விவாக்கத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தல்வர் ரப் தேவி பேசுகையில், இன்னும் ஓரு தினங்களில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படும்.
பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவர். அவர்களது கட்சித் தலைவர் கான்ஷி ராடன் ஆலோசனை நிடத்திய பிறகு இதுகுறித்து டிவு எடுக்கப்படும் என்றார்.
பதவியேற்பு நகழ்ச்சியில் சட்ட மேலவை தலைவர் ஜபீர் ஹுசைன், சட்டசபை சபாநிாயகர் சதானந்த சிங், ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் காங்கிரஸ் தலைவர் சந்தன் பச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications