வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவை குண்டுவெடிப்பு: குற்றம்சாட்டப்பட்ட 168 பேருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் 1998-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள 168 எதிரிகளுக்கும் கோவை ஜுடிசியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நிசார் மதானி ஆகியோர் இதில் முக்கிய எதிரிகள். ஐந்தாவது ஜூடிசியல் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் குற்றப்பத்திரிக்கைகளை எதிரிகளுக்கு வழங்கினார்.
குற்றப்பத்திரிக்கை வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
பாஷா மற்றும் ஆறு பேர் குற்றப்பத்திரிக்கைகளை பெற்றுக் கொண்டனர். அல் உம்மா துணைத் தலைவர் தஜுதீன், மத்திய செயலாளர் முகம்மது அன்சாரி, பாஷாவின் மகன் சித்திக் மற்றும் 27 பேர் குற்றப்பத்திரிக்கைகளை பெற மறுத்து விட்டனர். சிறையில் தங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகக் கூறி அவர்கள் இவ்வாறு தெரிவித்து விட்டனர்.
மதானியும் குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்து விட்டார். தனக்குத் தமிழ் தெரியாது என்றும், எனவே மலையாளத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி விட்டார்.
- 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 181 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
- எதிரிகள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 41 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- குற்றம்சாட்டப்பட்ட 181 பேரில் ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவர் தலைக்கும் ரூ. 2 லட்சம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் இறந்து விட்டனர்.
- இந்த வழக்கில் மொத்தம் 2332 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தில் 1498 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- குற்றப்பத்திரிகை மொத்தம் 16,483 பக்கங்கள் கொண்டது, தமிழில் உள்ளது. ஒவ்வொரு பிரதியும் 48 கிலோ எடை கொண்டது. அனைவருக்கும் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் மொத்த பக்கங்கள் 30.08 லட்சம் ஆகும். இதற்காக ரூ. 18 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏழு சிறப்பு டிராலிகளில் வைத்து நீதிமன்றத்திற்கு இவை கொண்டு வரப்பட்டன.
- குற்றம்சாட்டப்பட்டுள்ள 168 பேரில் 124 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பலத்த பாதுகாப்புடன் அனைத்து எதிரிகளும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
- கோவை நகர் முழுவதிலும் கூட பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications