வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீரில் ஊடுறுவலை நிறுத்த பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய யூனியன்அறிவுரை
பிரஸ்ஸல்ஸ்:
இந்தியாவுக்குள் ஊடுறுவல்காரர்களை அனுப்பும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூனியனின் ஆணையர் பால் நீல்சன் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியிலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுறுவல்காரர்களை அனுப்புவது குறித்து கூட்டத்தில் பேசியவர்கள் கவலை தெரிவித்தனர்.
கூட்டத்தில் நீல்சன் பேசுகையில், காஷ்மீர் தொடர்பாக எந்த தீர்மானத்தையும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடும்.
காஷ்மீர் விவகாரத்தில் சமநிலையான அணுகுமுறை தேவை. இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று மூன்றாவது நாடுகள் இரு நாடுகளையும் கேட்டுக் கொள்ளலாம். லாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் பேச்சு நடத்த வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வர சில உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால் அதை நீல்சன் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு பாதகமாக தீர்மானம் நிறைவேற்றுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இறுதியில் உப்புச்சப்பில்லாத வகையில் ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்தியாவுக்கு எதிரானதாக அந்த தீர்மானம் இல்லை.
காஷ்மீரிகளின் சுய நர்ணய உரிமை உள்ளிட்ட பல சர்ச்சைக்கிடமான அம்சங்கள் அதில் இல்லை.
இந்தியாவுக்கு சாதகமாக முதல் முறையாக ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை வெளிப்படையாகவும் அது கண்டித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாரீஸைச் சேர்ந்த வெளியுறவு விவகாரத் துறை நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications