வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
69 சதவீத இடஒதுக்கீடு: தமிழக அரசு முடிவில் எம் மாற்றமும் இல்லை - முதல்வர் கருணாநிதி
சென்னை:
தமிழக அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அவர் குறுக்கிட்டுப் பேசியதாவது:
தமிழக அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
இடஒதுக்கீட்டு சதவீதத்தை தொடர்ந்து கடைபிடிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக அரசுக்கு முந்தைய அரசும் தக்க நடவடிக்கை மேற்கொண்டது. இடஒதுக்கீட்டு சதவீதத்தைக் குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
மாநில சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது குறித்தும் அரசிலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மூலம் 9-வது அட்டவணையில் அச் சட்டம் சேர்க்கப்பட்டது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தக்க நேரத்தில் தெரிவிக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு தவறிவிட்டது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.