வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும்: தேர்தல் ஆணையர்

டெல்லி:

தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் குறப்பிட்ட காலத்திற்கு முன்பே சட்டசபைத் தேர்தலை நடத்தப்படும் என்று தெரிகிறது.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் இதுகுறித்து சூசகமாகத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

மூன்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் 2001-ம் மே மாதம் முடிவுக்கு வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் முன் கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது.

அடையாள அட்டை கட்டாயமாகும்

மூன்ற மாநில சட்டசபை தேர்தலில் அடையாள வாக்காளர் அட்டையை கட்டாயப்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக யோசித்து வருகிறது. அதே போல, முழுமையான அளவில் மின்னணு வாக்கப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபைத் தொகுதிகளில் 45 தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு நடந்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் முழு திருப்தி அடைந்துள்ளது. நாடு முழுவதிலும்இந்த முறை இனி பெரிய அளவில் விரிவுபடுத்தப்படும். இடைத் தேர்தல்களிலும்இனி மின்னணு வாக்குப் பதிவு நடத்தப்படும்.

தேர்தல் நடக்கவுள்ள மூன்று மாநிலங்களின் முதல்வர்களுக்கும், அடையாள அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்.தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே இப்பணியை நிறைவு செய்து விடுமாறும் கூறியுள்ளோம் எனறார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+