வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தபால் அட்டையில் விளம்பரம்: புதுமையான திட்டத்தை தமிழக தபால்துறை அறிமுகம்
சென்னை:
தபால் அட்டைகளில் விளம்பரம் செய்யும் புதுமையான திட்டத்தை தமிழக தபால் துறை அறிமுகப்படுத்கியுள்ளது. தபால் துறையின் வருவாயை பெருக்கும் நோக்குடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விரைவுத் தபால் பிரிவு அதிகாரி சீனிவாச ராகவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
25 காசு மதிப்புள்ள தபால் அட்டை, ரூ.1.50 மதிப்புள்ள இன்லேன்ட் லெட்டர், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் "ஏரோகிராம்" ஆகியவற்றில் தனியார் துறையினர் விளம்பரம் செய்யலாம். ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு விளம்பர வாசகங்கள் அச்சிடப்படும்.
அதே போல் தபால் துறை வாகனங்கள்மீதும் தனியார் விளம்பரங்கள் எழுத அனுமதி அளிக்கப்படும். சொந்த கட்டடங்களில் செயல்படும் தபால் அலுவலகங்களில் விளம்பர போர்டுகள் வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விளம்பர போர்டுகளில் சினிமா, மதுவகை விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வகைகளில் எந்தத் தடையும் இல்லை என்றார் சீனிவாச ராகவன்.












Click it and Unblock the Notifications