வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
வாழப்பாடியைக் கண்டித்து பா.ம.க போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடத்தவிருந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வேறு தேதியில் போராட்டம் நடத்தப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுக்க பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் பிரிவு முடிவு செய்துள்ளது. ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்ற மனு கொடுக்கவும் அப்பிரிவு திட்டமிட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications