வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

மண்ண்ெணெய் விலை உயர்வைக் கண்டித்து ஏப். 10ல் தமிழகத்தில் கம்யூ. போராட்டம்

சென்னை:

மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கரய்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் செயற்குழுக் கூட்டம் மார்ச் 26-ம் தேதி முதல் நடந்தது. அப்போது போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

சேலம் இரும்பு உருக்காலை உள்ளிட்ட பிற பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு மின் திருத்த மசோதாவை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

தமிழ் நாட்டில் தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு பாதிப்பு வராத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூரில் மார்ச் 21-ம் தேதி சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் ஏ.ஜி.சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேணடும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+