வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெரிக்காவில் சூறாவளிக்கு 4 பேர் சாவு; 100 பேருக்கு மேல் காயம்
ஃபோர்ட்வொர்த் (யு.எஸ்.):
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஃபோர்ட் வொர்த் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய டோர்னாடோ சூறாவளிக்கு 4 பேர் பலியானார்கள். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளின் மேற் கூரைகள், ஜன்னல் கதவுகள் ஆகியவை சேதமடைந்தன. எடை குறைவான பொருட்கள் எல்லாம் காற்றில் பறந்தன. மரங்கள் வேறோடு சாய்ந்தன.
சாலையோர தெரு விளக்குக் கம்பங்கள் உடைந்தன. மின் சப்ளை பாதிக்கப்பட்டது. ஃபோர்ட் வொர்த் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டது. ஃபோர்ட் வொர்த் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 5 டிராக்டர் டிரெய்லர்கள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போதுதான் டோர்னாடோ என்ற சூறாவளி வீசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications