வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எகிப்து: சர்வதேச சந்தையில் பலகோடி மதிப்புள்ள யானைத் தந்தங்கள் மீட்பு
கெய்ரோ:
சர்வதேச சந்தையில் பலகோடி மதிப்புள்ள யானைத் தந்தங்களை எகிப்து வனத்துறை அதிகாரியினர் கைப்பற்றினர்.
கெய்ரோவில் அஸ்வானா பகுதியில் யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 138 கிலோ எடையுள்ள 78 யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச சந்தையின் இதன் மதிப்பு பல கோடி ரூபாயாகும்.
யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததற்கும் பிரபல வியாபாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் வெளிநாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து தந்தங்களை வாங்கி அவற்றை கெய்ரோ மற்றும் அஸ்வான் பகுதியிலுள்ள சிறுவியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததுள்ளார் என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications