வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்கிஸில் நியுசிலாந்து 232 ரன்கள்-ஆஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 4 ரன்கள்
ஹாமில்டன்:
ஹாமில்டனில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் நியுசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்த நியுசிலாந்து முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பிரெட் லீ மற்றும் மெக்ரா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சில் நியுசிலாந்து வீரர்கள் விரைவில் அவுட்டானார்கள். மேக்மில்லன் மட்டும் நின்று ஆடி 79 ரன்கள் எடுத்தார்.
பிரெட் லீ 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மெக்ரா 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில் நியுசிலாந்து 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகக் குறைந்த ரன்னில் நியுசிலாந்தை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் தனது முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.