வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் அருகே இரண்டு லாரிகள் மோதல் 25 பேர் துடிதுடித்துச் சாவு

பெங்களூர்:

நின்று கொண்டிருந்த லாரி மீது மின்னல் வேகத்தில் வந்த இன்னொரு லாரி மோதியதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மாண்டனர். 42 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறறு வருகின்றனர். அவர்களின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை பீஜாப்பூர் மாவட்டம் மனகோலி அருகே இச்சம்பவம் நடந்தது.

இக்கோர விபத்தில் இறந்த அனைவரும் சாமி கும்பிடச் சென்றவர்கள் என்றும், அவர்களில் 7 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள், 10 பேர் குழந்தைகள் என்றும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் மனிதச் சதைத் துண்டுகளும், சடலங்களுமாய்க் மிகவும் கோரமாய்க் காட்சியளித்தது.

இவ்விபத்தில் இரண்டு லாரிகளும் முட்டைக் கூடு போல் உடைந்து நொறுங்கியது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

விபத்தில் இறந்தோரின் உடலை மீட்கப்பட்டு வருகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+