வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷ்யாவில் திடீர் பனிச்சரிவு: நடுரோட்டில் மக்கள் பாதிப்பு
மாஸ்கோ:
ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பனிச்சரிவினால் நடுரோட்டில் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த மக்கள் அலுவலகங்களுக்கும் செல்லமுடியாமல், வீடுகளுக்கும் திரும்ப முடியாமல் சாலைகளிலேயே தவித்தனர். 500 க்கும் மேற்பட்ட மக்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவில் ஜியோரிஜியா, ராக்ஸ்கை, ஒசேடியா பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
வியாழக்கிழமை சிலமணிநேரங்கள் இப்பிரச்சனை நீடித்தது. பின்னர் சாலைகளில் தவித்துக்கொண்டிருந்த மக்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டனர்.
ரஷ்யாவில் 19 வது நூற்றாண்டில் இதேபோல் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின்னர் வியாழக்கிழமை இப்பனிச்சரிவு ஏற்பட்டது.
ரஷ்யநாட்டு செய்திக்குறிப்பு ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.