வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேற்கு வங்கத்தில் 22 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் பறிமுதல்
கல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத் தகவலை, மாநில உணவுத் துறை அமைச்சர் கலிமுத்தீன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அவர் அளித்த பதில்:
மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும், கல்கத்தா நகரில் இருந்து மட்டும் 7 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டுகளை வழங்குவது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், ஏப்ரல் 11-ம் தேதி புது தில்லியில் நடைபெறும் உணவு அமைச்சர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் உள்ள வெளிநாட்டினர் யாருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications