வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவையிலுள்ள இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம் மற்றும் பூங்காவில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சரணாலய வார்டனும், வன அதிகாரியுமான உதயன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சரணாலயத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மூலம் நடத்திய விலங்குகள் குறித்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இது தெரிய வந்தது.
தற்போது சரணாலயத்தில் 14 புலிகள் உள்ளன. இவற்றில் ஏழு பெண் புலிகளும், ஒரு குட்டியும் அடங்கும். சிறுத்தைகளின் எண்ணிக்கையும் இப்பூங்காவில் அதிகரித்து வருகிறது.
1999-ல் யானைகளின் பெருக்கம் சதுர கிலோமீட்டருக்கு 0.96 என்ற கணக்கில் இருந்தது. இந்த ஆண்டு இது 1.46 என்ற அளவில் உயர்ந்துள்ளது. யானைகள் அதிக அளவில் இடம் பெயர்ந்ததாலும், வனங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதுமே இதற்குக் காரணம் என்றார் அவர்.
தற்போதைய கணக்கெடுப்பின்படி சரணாலயத்தில் உள்ள விலங்குகள் விவரம்:
மான் - 42, யானைகள் - 109, நீலகிரி குரங்கு - 218, குரங்குகள் - 161, மான் - 22.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications