மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
ஜார்ஜ்டவுன் (கயானா):
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் விளையாடவில்லை.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்போர்டாவில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. முழங்காலில் அறுவை செய்து கொண்டுள்ளதால் இப்போட்டியில் சயீத் அன்வர் விளையாடவில்லை.
அதே நேரத்தில், இரண்டாவது மற்றும் 3-வது டெஸ்டுகளிலும் அவர் விளையாடுவாரா என்பதும் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை முழுமையானபயிற்சியில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், முதல் டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷிவ்நாராயண் சந்தர்பால் நிச்சயம் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லாததால்,பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை.