முன்னாள் காதலியைத் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பாய்காட்டுக்கு மூன்றுமாதம் சிறை
பாரீஸ்:
தனது முன்னாள் காதலியைத் தாக்கியதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட்டுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், 50 ஆயிரம்ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டது.
1996-ம் ஆண்டு கேப் டி ஆண்டிப்ஸ் என்ற இடத்தில் உள்ள ரிவேரா ரெசார்ட்டுக்கு காதலி மார்கரெட் மூரேவுடன் பாய்காட் சென்றிருந்தார். அப்போது,இருவருக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதில் காதலியை பாய்காட் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, பாய்காட் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் மூரே வழக்குத் தொடுத்தார். வழக்கின் முடிவில் பாய்காட்டுக்கு 3 மாதச் சிறைத் தண்டனையும், 50ஆயிரம் ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் பாய்காட் முறையீடு செய்தார்.
அங்கு நடந்த விசாரணையின் முடிவில் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை மேல் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிரெஞ்சு முறையீட்டுநீதிமன்றத்தில் மூரே முறையீடு செய்தார்.
இம் முறையீட்டு மனுவின் மீது நடந்த விசாரணையின் முடிவில் கீழ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையையும், அபராதத்தையும் முறையீட்டு நீதிமன்றம்உறுதி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications