தமிழகத்தில் இன்று
ரகுபதி, கருப்பசாமிபாண்டியன் திமுகவில் இணைந்தனர்
சென்னை:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ரகுபதி, கருப்பசாமி பாண்டியன், ஆகியோர்தங்களது ஆதரவாளர்கள் 5000 பேருடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில்தி.மு.க.வில் இணைந்தனர்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன்.திருநெல்வேலி மாவட்ட பிரமுகரான இவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.அதேபோல் அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர்ரகுபதி. இவரையும் கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார்.
நீக்கப்பட்ட இந்த இரு தலைவர்களும் தங்களது ஆதரவு அதிமுகவினர் 5 ஆயிரம்பேருடன் புதன்கிழமை மாலை திமுகவில் இணைந்தனர். இதற்கான இணைப்பு விழாதி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை5.30 மணிக்கு நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ரகுபதியும், கருப்பசாமி பாண்டியனும் திமுகவில்இணைந்தனர்.
அவர்களை பொன்னாடை அணிவித்து முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராச்சாமி, மேயர் ஸ்டாலின்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருப்பசாமி பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஜெயலலிதா பேரவைசெயலாளர் கருணாகரன், கவுன்சிலர்கள் மாரியப்பன், சுப்பையா, இந்திரா, உதுமான்,பரமசிவபாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் தொண்டர்கள் 2700 பேரும் திமுகவில்இணைந்தனர்.
ரகுபதி தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் பொன்னுசாமி,இணை செயலாளர் ஜாபர் அலி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சையது முகமது,பொருளாளர் போஸ் உள்ளிட்ட 2300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில்சேர்ந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications