For Daily Alerts
Just In
மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு
பிலிப்பைன்ஸில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
மணிலா:
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நான்கு இடங்களில்குண்டுவெடிப்பு நடந்தது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு ரேடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிலாவிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மின்டானோ பகுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இக்குண்டுவெடிப்புச்சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விபரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
இதற்குப் பின்னணியில் முஸ்லீம் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தை உயர்போலீஸ் அதிகாரிகள்நேரில் சென்று பார்வையிட்டனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, May 3, 2000, 5:30 [IST]