தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வைஷ்ணவதேவி கோயிலுக்கு 10 லட்சம் பக்தர்கள் வருகை
ஜம்மு:
இமயமலை அடிவாரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற குகைக்கோயிலான வைஷ்ணவதேவி கோயிலுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானபக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 5 லட்சம்பேரும், வெளி மாநிலங்களில் இருந்து 4 லட்சம் பேரும் வந்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வைஷ்ணவ தேவியைத் தரிசித்தனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகைதருகின்றனர். கோடைக் காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும்அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications