தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவருமான ஏ.கே. அந்தோணி வீடு மீது கல்வீசித் தாக்கியதாக விஷ்வாம்பரன் (40)கைது செய்யப்பட்டார்.
அந்தோணி முதல்வராக இருந்தபோது, அரசுப் பணியில் இருந்த விஷ்வாம்பரன்ஒழுங்கீனமாக இருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். விஷ்வாம்பரன்போதை மருந்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில், திருவனந்தபுரத்தில் ஈஸ்வரவிலாசம் என்ற இடத்தில் உள்ள அந்தோணிவீடு மீது விஷ்வாம்பரன் வியாழக்கிழமை அதிகாலை கல்வீசித் தாக்கினார். இதில்,வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன.
இச் சம்பவத்தை அடுத்து விஷ்வாம்பரன் கைது செய்யப்பட்டார். என்னைவேலையிருந்து டிஸ்மிஸ் செய்ததற்குப் பழிவாங்குவதற்காக அந்தோணி வீடு மீதுகல்வீசியதாக போலீஸாரிடம் விஷ்வாம்பரன் தெரிவித்தார். கடந்த ஆண்டும்,அந்தோணி வீடு மீது விஷ்வாம்பரன் கல்வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications