முகத்தில் தெளித்த சாரல்...
சென்னை:
அதிமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை செனனையில் கூட இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இக்கூட்டத்தில் முற்றிலும் புதிய உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். அதிமுகவில் உள்ள மாநில, மாவட்ட, நிர்வாகிகளை ஜெயலலிதா முற்றிலுமாய்நீக்கினார். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் மூத்த உறுப்பினர்களான சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமிபாண்டியன்,ரகுபதி ஆகியோரை நீக்கியதுடன் அவர்களை அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினார்.
இதனால் கோபமடைந்த அவர்கள் ஜெயலலிதாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்காமல் விடமாட்டோம் என்று கூறி வந்தனர்.இந்த நிலையில் ரகுபதி, மற்றும் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
தற்போது அதிமுக செயற்குழு கூட்டம் நாளை கூட இருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள்அறிமுகப்படுத்தப்படுவார்கள். செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
அந்தச் சுற்றுப்பயணத்தின் போது தொகுதி வாரியாக யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து அவர்களுக்கு வரும் தேர்தலில்வேட்பாளராக நிற்பதற்கு அனுமதி கொடுப்பார் என்று தெரிகிறது. மேலும் நாளை கூடும் கூட்டத்திலும் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுப்பார்என்று கூறப்படுகிறது.
அதிமுக கட்சிக்காக சென்னை அண்ணாசாலையில் சபையர் தியேட்டர் வாங்கப்பட்டது. ஆனால் அது உபயோகப்படுத்தப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும்உள்ளது. அது குறித்து ரகுபதியும், கருப்பசாமி பாண்டியனும் கேள்வி எழுப்பி வந்தார்கள். அவர்களது கேள்விக்கு நாளை பதிலளிக்கப்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.