For Daily Alerts
Just In
கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
வணிகர்கள் போராட்டம்: பஸ்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வணிகர்தினத்தை (மே 5)முன்னிட்டு கடைகள்அடைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் வியாபாரிகள் மே 5 ம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடுகின்றனர். அதேபோல் இந்தஆண்டும் வணிகர்தினமாக சென்னையில் வியாபாரிகள் பேரணி நடத்துகின்றனர்.
இதனையொட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடந்தது.
நீலகிரியிலும் வணிகர்கள் தினத்திற்கு வியாபாரிகள் ஒத்துழைப்புக் கொடுத்தனர். விவசாயிகளும் தங்களதுஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுலா நகரான ஊட்டிக்கு வெள்ளிக்கிழமை பயணிகளின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. பஸ்கள்போலீஸ் பாதுகாப்புடன் இயங்கின.
Story first published: Friday, May 5, 2000, 5:30 [IST]