தமிழகத்தில் இன்று
நியுயார்க்:
புற்றுநோய் ஆராய்ச்சியில் திறமையாக ஈடுபட்டதற்காக அமெரிக்காவில் வாழும்இந்திய விஞ்ஞானிகளுக்குப் பெருமைமிக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரூ.1கோடி மதிப்புள்ள சார்லஸ் எஃப். கெட்டரிங் விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் வடக்குக் கரோலினா மாகாணத்தில் உள்ள ரிசர்ச் டிரையாங்கிள்இன்ஸ்டிடியூட்டின் முதன்மை விஞ்ஞானி மன்சுக் வானி மற்றும் தலைமை விஞ்ஞானிமன்றோ வால் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
புற்றுநோய் ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்ட இவர்கள், அந் நோய்க்கு புதியமருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் விரைவில்புற்றுநோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுடன் மிகவும் எளிமையானது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜெனரல் மோட்டார்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் 1978-ம் ஆண்டுமுதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 87 விஞ்ஞானிகளுக்கு ரூ.43கோடிக்கு மேல் விருதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகளில் 7 பேர் நோபல்பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரு இந்தியவிஞ்ஞானிகளுக்கும் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தில்ஜூன் 7-ம் தேதி நடைபெறும் விழாவில் இவ் விருது வழங்கப்படும். ஒவ்வொருவிருதும் ரூ.1 கோடி பணமுடிப்பும், தங்கப் பதக்கமும் கொண்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications