For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
சவுரவ் கங்குலிக்கு "சியட் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது
மும்பை:
1999-2000-ம் ஆண்டின் சியட் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது இந்தியகேப்டன் சவுரங் கங்குலிக்கு வழங்கப்படவுள்ளது. சியட் தரப் பட்டியலில் அவர் 98 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அவருக்குஅடுத்தபடியாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், நியுசிலாந்தின் கிறிஸ்கெய்ர்ன்ஸும் தலா 95 புள்ளிகள் பெற்றனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் சிறப்பாகவிளையாடியதற்காக கங்குலிக்கு அதிக புள்ளிகள் கிடைத்தன. 1999-ம் ஆண்டு மே1-ம் தேதியிலிருந்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடந்த கிரிக்கெட்டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வீரர்களின் திறமையை மதிப்பிட்டு புள்ளிகள்வழங்கப்படுகின்றன. சுனில் கவாஸ்கர், கிளைவ் லாயிட், இயான சேப்பல் ஆகியோர் கொண்ட குழு சியட்விருதுக்கு சவுரவ் கங்குலி பெயரை அறிவித்துள்ளது. |
Comments
Story first published: Saturday, May 6, 2000, 5:30 [IST]