தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் வட பகுதியில் யாழ்பாணம் அருகே ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடைேய மோதல் தொடர்ந்துநடந்து வருகிறது.
ஆனால். அப்பகுதியில் பெருமளவில் அமைதி நிலவுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கிலாலியின் தென் பகுதியில் ராணுவத்தினரை புலிகள் பலமுறை தாக்கியதாகவும் ஆனால், ராணுவத்தினர் தானியங்கி துப்பாக்கித்தாக்குதல் நடத்தி புலிகளின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துவிட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்துபுலிகள் அங்கிருந்து பின்வாங்கிவிட்டதகவும் அரசு கூறுகிறது.
புலிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியானதாவும் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ராணுவத்தினர் தற்காப்புநிலையிலிருந்து முன்னேறி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ராணுவத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பலாலியில் இருந்து வெளியேறிவிட்ட 10,000 பொது மக்களும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாவும்பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவாையான அடிப்படை பொருள்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுகூறுகிறது.
இதற்கிடையே கிழக்கு பட்டிகலோவாைவில் கல்லாடியில் அன்னை வோளாங்கண்னி ஆலய சாலையில் குண்டு வெடித்து ஒருவர்இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications