தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பிணைக் கைதிகளான இந்திய அமைதிகாப்புப் படை வீரர்கள்

டெல்லி:

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியர்ரா லியோனில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்திய அமைதி காப்புப் படையின் 35ராணுவ வீரர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கோபி அன்னான் பிரதமர் வாஜ்பாயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைதி காப்புப் பணிக்காக சென்ற படையினரை புரட்சிகர ஐக்கிய முன்னணியைச் சேர்ந்ததீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதில் 35 இந்திய ராணுவத்தினரும் அடங்குவர்.

இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதலில் சுமார் 300 ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் 13 ராணுவ வாகனங்களில் சென்றபோதுஅவர்களை தீவிரவாதிகள் பிடித்தனர். இவர்களில் 6 பேரை மட்டும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.

நிலைமை மோசமானதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களின் 90 குடும்பங்கள் அந் நாட்டிலிருந்து ஹெலிகாப்டர்கள்மூலம் வெளியேற்றப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+