தமிழகத்தில் இன்று
சென்னை:
மயக்க மருத்துவ சிகிச்சை புரியும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய சிகிச்சை செய்யும்மருத்துவர்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு இருப்பதால் அவர்கள் வெளிநாடுகள்சென்று பணிபுரிய தடை விதிக்கப்படுகிறது.
இத்தகவலை சட்டசபையில் செவ்வாய் கிழமையன்று தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்அளித்த பதில் வருமாறு:
ஹோமியோபதி மருத்துவமனைகள் தாலுகா அளவில் செயல்பட்டு வருகின்றன. அந்தமருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்றகுறை உள்ளது. அதை போக்கும் வகையில் எல்லா ஹோமியோபதிமருத்துவமனைகளிலும் ஹோமியோபதி மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளை தயார்செய்யும் மயக்க மருத்துவ சிகிச்சை பற்றி படித்த டாக்டர்கள் எண்ணிக்கை மிகவும்குறைவாக உள்ளது.
எனவே அத்தகைய மருத்துவ படிப்பு படிப்பவர்களுக்கு அரசு எல்லா வகையானஊக்கமும் உதவியும் செய்யும். அதோடு இந்த படிப்பு படித்தவர்கள் வெளிநாடுகளில்சென்று பணிபுரிவதற்கு தடை விதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications