தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கை பிரச்சனை குறித்து பிரதமர் வாஜ்பாய் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைநடத்துகிறார். இந்தக் கூட்டம் 8 ம் தேதி திங்கள் கிழமை காலை நடைபெறும்.
யாழ்பாணத்தில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளால் சூழப்பட்டுள்ளனர். அவர்கள் உயிரோடுமீட்கப்படுவார்களா என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுகதலைவர் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். அப்போதுமத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தமிழகம் ஒத்துழைக்கும் என்று கூறினார்.
பின்னர் பிரதமர் இல்லத்தில் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ளஅனைத்து எதிர்க்கட்சிகளும் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள பிரதமர் நினைக்கிறார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர் அனைத்து எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆலோசனை திங்கள்கிழமை டெல்லியில் நடக்கும். இதற்கு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications