தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்: ஜெ

சென்னை:

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தப் படுகொலைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாமனிதாபிமான முறையில் உதவ வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

சனிக்கிழமை சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டம் முடிந்த பின் ஜெயலலிதா நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் தினமும் நடந்து வரும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உதவ வேண்டும். தமிழர்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் கிடைக்கவேண்டும்.

பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா உதவலாம். இதுவேஅதிமுகவின் நிலைப்பாடு.

இலங்கையில் 40 ஆயிரம் சிங்கள சிப்பாய்களை மீட்க மத்திய அரசு இராணுவ உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதை நான் வரவேற்கிறேன்.அரசியல் தீர்வுக்குத் தான் இந்தியா உதவ வேண்டும். இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சனை. இதற்கு இந்தியா உதவத் தேவையில்லை. ஆனால்இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியா உதவலாம்.

அதிமுக என்ற மிகப்பெரிய நதியை சுத்தப்படுத்துவதற்காக நான் பழைய நிர்வாகிகளை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் கட்சியிலிருந்து நீக்கியுள்ளேன். அவர்களைமீண்டும் கட்சியில் சேர்ப்பேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தமிழக சட்டசபைக்கு இப்பொழுதோ, அல்லது இன்னும் 6 மாதம் கழித்தோ எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்கத் தயாராகஇருக்கிறோம். தேர்தலில் அதிமுக ஜெயித்தால் நாங்கள் தனித்தே ஆட்சி அமைப்போம்.

சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாய் அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+