தமிழகத்தில் இன்று
நியுயார்க்:
இந்தியரான அனில் தாக்கூர் உள்பட 5 பேரை சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் பவும்ஹாமர்ஸ் மீது இனவெறித் தாக்குதல் நடத்தியதாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி இவர் இன்ஜினியரான அனில், மற்றொரு இந்தியரான சந்தீப் பட்டேல் ஆகியோரைபென்சில்வேனியாவில் பீட்ஸ்பெர்கில் சுட்டுக் கொன்றார். மேலும் 3 பேரையும் கொன்றார்.
வரும் 17ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இன, நிற, மத. தேசிய வெறிகளால் தூண்டப்பட்ட ரிச்சர்ட் இந்தகொலைகளை செய்துள்ளார். இரு இந்தியர்கள் தவிர்த்து யூத இனப் பெண்ணான அனிதா கோர்டன், வியட்நாமைச் சேர்ந்த தாவோபாம், சீனாவைச் சேர்ந்த ஜீ-யெசுன், ஆப்பிரிக்க அமெரிக்கரான கேரி லீ ஆகியோரையும் ரிச்சர்ட் சுட்டுக் கொன்றார்.
பிரீ மார்க்கெட் பார்ட்டி எனும் அமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் ஐரோப்பிய அமெரிக்கர்களின் நலனுக்காக போராடி வருவதாக கூறிக்கொள்கிறார். வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவில் குடிபுகுவதற்கு ரிச்சர்ட் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
அமெரிக்காவில் இன்னும் சிறிது காலத்தில் பிற இனத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வெள்ளையர்களின் எண்ணிக்கைகுறைந்துவிடும் குறிப்பாக ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என இந்த அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.