For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு கார் மோதி சிறுமி சாவு: நஷ்டஈடு தர உத்தரவு

டெல்லி:

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பாதுகாப்பிற்காக சென்ற போலீஸ் ஜீப் மோதி உடல் சிதைந்து இறந்த சிறுமிக்கு மத்திய அரசு ரூ 2 லட்சம் நஷ்டஈடுவழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைக் கழகம் (என்.எச்.ஆர்.சி) கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்கள் தங்கள் கார்களில் செல்லும்போது அவர்களது பாதுகாப்பிற்காகச் செல்லும் ஜீப்புகள்பாதசாரிகள் மேல் மோதி விபத்து நடப்பது சகஜமாகி வருகிறது.

அந்த விபத்துக்களில் இறந்த பொதுமக்களுக்கென்று எந்த வித உதவித்தொகையையும் அரசு அளிப்பதில்லை. பாதுகாப்பு வாகனம் மோதி இறந்தஇந்தச் சிறுமிக்கு மத்திய அரசு இன்னும் 4 வாரங்களுக்குள் நஷ்டஈடாக ரூ 2 லட்சத்தை வழங்க வேண்டும்.

9 ம் வகுப்பு படித்து வந்த வந்தனா சிங் என்ற சிறுமி இவ்விபத்தில் இறந்தாள். 1997 ம் ஆண்டு நவம்பர் 7 ம் தேதி இந்த மாணவி பள்ளிக்கூடத்திலிருந்துதிரும்புகையில் விபத்துக்குள்ளானாள். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமுன் இறந்தாள். கோர்காபூரில் இவ்விபத்து நடந்தது.

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பாதுகாப்பிற்காக பல போலீஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அந்த போலீஸ் வாகனத்தில் எந்தவாகனத்தில் மோதி இந்தச் சிறுமி இறந்தாள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறுகையில், விபத்துக்குள்ளாகி இறந்த இந்தச் சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ 2 லட்சம்வழங்க வேண்டும். பாதுகாப்பிற்காக வந்த வாகனம் மோதியதில் அநியாயத்திற்கு பள்ளிச்சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்று தீர்ப்பு கூறினார்.

இந்தத் தீர்ப்பை உடனடியாய் செயல்படுத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைக் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X